'க்ஷயம்' என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் யுகாதிதான். 'மாலோடு' 'திரு' சேர்ந்து, மஹாவிஷ்ணு 'திருமால்' ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும்

இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை! ...
Sri Kamalamba Navavarana Keerthanaikalin Arputha Palangal
ஸ்ரீ அம்பாளின் நவாவரண பூஜைகளின் மஹிமைகள், ஒன்பது ஸ்ரீசக்ரப் படங்கள் பக்தி ரஸத்துடன் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.
Shri Lakshmi Sotirangal
ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் துதிகள் புராணங்களிலும், மஹான்களின் அருள் படைப்புகளிலும், வழிவழியாக வந்த ஸம்ப்ரதாய ஸ்தோத்ரங்களிலும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் இருந்து சில துதிகள் இச்சிறுநூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Price Rs 25.00
Price Rs 12.00
Arul Pozhiyum Thiruthalangal
அருள் பொழியும் திருத்தலங்கள்
திருத்தலங்களின் மகிமைகள் கூறும் கட்டுரைகள் அடங்கிய நூல்
Sri Vaishnava Sandhya Vandanam
ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யா வந்தனம் (புதுப்பொலிவுடன்)
ருக்-யஜுஸ்-ஸாமவேதிகள் மூவரும் அனுஷ்டிக்கவேண்டிய ஸந்த்யாவந்தன விதிமுறைகள் மற்றும் மந்த்ரங்கள் கொண்ட நூல்...
Price Rs 30.00
Price Rs.12.00
Lifco Publishers
நவராத்ரி - சில தகவல்கள்
நவராத்ரியின் முதல் மூன்று நாட்களும் தமோகுண நிறங்கொண்ட துர்காதேவியையும், சதுர்த்தி முதல் மூன்று நாட்களும் ரஜோகுண நிறங்கொண்ட திருமகள் வடிவை பூஜை செய்கிறோம்.
மேலும்...
Vratha Pooja Vidhanam
ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை, ஸ்ரீ ராமநவமி பூஜை, ஸ்ரீ வரலஷ்மீ விரத பூஜை போன்ற 36 விரத பூஜைகள் மற்றும் பூஜை சம்பந்தமான சில முக்கியக் குறிப்புகள் கொண்டது. மேலும்...