நவராத்ரி பெருவிழா இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசையன்று (மஹாளய அமாவாசை) தொடங்கி ஒன்பதாம் நாள் ஸரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாளன்று விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது . இயற்கையின் மகோன்னதக் காட்சி மலரும் சரத் ருதுவில் நவராத்ரி பூஜையும் வருகிறது.
நவராத்ரி என்பது நாம் அம்பாளை அன்பாக அழைத்து, பூஜித்து, துதித்து பாடி பாராயணம் செய்து அவள் விரும்பும் உணவை அவளுக்கு நிவேதனம் செய்து விதவிதமாய் அலங்காரம் செய்து, அவளை மகிழ்வித்து, அவள் அருளை நாடும் நல்லதொரு விழாவாகும்.
நவராத்ரி ஒன்பது நாள்களிலும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான புஷ்பம்,ஒன்பது வகையான
அலங்காரம், என்று எல்லாம் ஒன்பதாக் அமைவதுடன் நாள்தோறும் ஒன்பது சகஸ்ரநாமம் முறைப்படி அப்யுதத்
திற்கு நாமார்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் இரண்டு வயது பெண்குழந்தை முதல் முறையே பத்து வயது குழந்தை வரை ஒவ்வொன்றாகவோ, முதல்நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ குமாரி பூஜை அவசியம் செய்யவேண்டும். இந்த பூஜையின் பயனை ஆதிசேஷனாலும் அளவிட்டு கூறமுடியாது என்று நூல்கள் போதிக்கின்றன.
நாள் வயது பெயர் பயன்
1 2 குமாரிகா தரித்திர நாசம்
2 3 திரிமூர்த்தி தனதான்ய வளம்
3 4 கல்யாணி பகை ஒழிதல்
4 5 ரோகிணி கல்வி வளர்ச்சி
5 6 காளிகா துன்பம் நீங்குதல்
6 7 சண்டிகா செல்வ வளர்ச்சி
7 8 ஸாம்பவி க்ஷேம் விருத்தி
8 9 துர்க்கா பயம் நீங்குதல்
9 10 ஸுபத்ரா ஸ்ர்வ மங்களம் உண்டாதல்
முன் நாட்களில் நவராத்ரி பூஜை - துர்கா பூஜை என்றே வழங்கப்பட்டு வந்தது. இந்த பூஜையில் ஸ்ரீ வித்யா மந்திரங்களும், உபதேச மந்திரங்களும் ஜெபம் செய்யப் பெற்று, உரு ஏற்றப்பெற்று வலுவாககிக் கொண்டார்கள்.
நவராத்ரியின் முதல் மூன்று நாட்களும் தமோகுண நிறங்கொண்ட துர்காதேவியையும், சதுர்த்தி முதல் மூன்று நாட்களும் ரஜோகுண நிறங்கொண்ட திருமகள் வடிவையும் சப்தமி முதல் மூன்று நாட்கள் சத்வ குணமயமான வெண்ணிற ஸரஸ்வதி வடிவையும் பூஜை செய்கிறோம்.
நவராத்ரியில் நவாவரண புஜைகள் அமோகமான பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றிற்கு பதிலாக கமலாம்பா நவாவரண கீர்த் கீர்த்தனைகளை கானம் செய்தோ, பராயணம் செய்தோ அதே பலன்களை சுலபமாக பெற்றுவிடலாம் என்று காலம் காலமாக ஒரு நம்பிக்கை இருந்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இவ்வருடம், ஸ்ரீ கமலாம்பா நவாவரண கீர்த்தசஅனைகளின் அற்புத பலன்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளோம்
வாசகர்களின் நெடுநாளைய வேண்டுகோளின்படி எங்களது வெவ்வேறு பிரசுரங்களிலிருந்து நவராத்ரி சம்பந்தமான முக்கிய
சுலோகங்களைத் தொகுத்து சிறப்பு நூலாக நவராத்ரிப் பூஜையை வெளியிட்டுள்ளோம். இந்நூலில் முக்கியமாக நவராத்ரி,
ஸரஸ்வதி பூஜா விதிகளும், துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதி ஸஹஸ்ரநாமாவளிகளும் தரப்பட்டுள்ளன. இது பூஜைக்குகந்த
நூலாக மட்டுமல்லாமல், பரிசளிக்கவும் சிறந்தது.